லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவோடு இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்க கூடாது என்ற முடிவில் ஜெயம் ரவி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணத்தால் தான், அவர் “தக் லைஃப்” படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்ற பேச்சும் அடிபட ஆரம்பித்து விட்டது. “தக் லைஃப்” படத்தில் ஏற்கனவே 30 நாட்கள் (காட்சியில்) நடித்து வந்தார் ஜெயம் ரவி. ஆனால் அந்தப் படத்தில் சற்றும் எதிர்பாராமல் சிம்புவை கொண்டு வந்தார்கள்.
இதனால் அப்செட் ஆன நடிகர் ஜெயம் ரவி அவர்கள், வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி படத்தில் இனி தன்னால் நடிக்க முடியாது என்றும். தான் கொடுத்த 30 நாட்கள் முடிந்து விட்டதாகவும் கூறி வெளியேறியுள்ளார். பலருக்கு நினைவிருக்கும் , பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி அவர்கள் சிம்பு ஏன் விலகினார் என்று பத்திரிகையாளர்களிடம் சில காரசாரமான பதில்களைச் சொல்லி இருந்தார். அவர் சிம்புவை சாடியும் இருந்தார்.
அதுபோலவே தற்போது தக் லைஃப் படத்தில் இருந்தும் விலகியுள்ளார் ஜெயம் ரவி.